Tuesday, June 2, 2015
சேனல் மாத்தினப்ப, ஒரு மூணு வயசுக் குழந்தை அப்பா அம்மாக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு, "குரு ப்ரம்மா குரு விஷ்னு" மழலை துளிக்கூட குறையாமல்... நல்லாருக்கேன்னு தொடர்ந்து பார்த்தால் , அடுத்தது, திருக்குறள் , தமிழ் வருடங்கள் 60, நட்ச்சத்திரங்கள் 27, சீதா கல்யாணம், திருப்பாவை 2, ராமாயணம் சுருக்கமாக, சுந்தர காண்டம் (இது இரண்டும் அப்படியே கம்ப ராமாயணத்திலிருந்து),ஐம்பெருங்காப்பியங்கள், யார் எழுதியது.. எந்த காலகட்டம் , சுருக்கமாக சிலப்பதிகாரம், ஒரு தாலாட்டு பாடல்..., ஆய கலைகள் 64, மண்டோதரி பெருமை.. அப்பா மூச்சு வாங்கறது... அடுத்து நம்ம கல்யாணங்களின் முறைகள் நு அந்த அம்மா சொன்ன உடனே.. "படைப்பு மதுரை தூர்தர்ஷன்" வந்ததோ பொழச்சேன்... எப்ப சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சு இருப்பாங்க அந்த குழந்தைக்கு.. இந்த படுத்தல்க்கு எல்லாம் தண்டனை இல்லயா .. எதுவுமே அளவோடு இருந்தால்தான் ரசிக்கிறது..
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment