வானம் எனும் கடலினிலே
விண்மீன்கள் நீந்தி வர
வெண்ணிற ஓடமாக நீ
எங்கு செல்கிறாய் வெள்ளி நிலவே.
வானம் எனும் வீதியிலே
நட்சத்திர சொந்தம் தொடர்ந்து வர
ஊர்வலமாக நீயும்
எங்கு செல்கிறாய் வண்ண நிலவே
வானம் எனும் மெத்தையிலே
மேகமெனும் தலையணை மேல்
நிம்மதியாய் உறங்காமல் நீ
எங்கு செல்கிறாய் வெண்ணிலவே
வானம் எனும் சிறையினிலே
விண்மீன்கள் காவலாக
எத்தனை நாள்
அடைந்திருப்பாய் வெண்ணிலவே
ஆவலுடன் உனைக்காண இங்கு நான் காத்திருக்க
மேகத்திரையின் மறைவினிலே
கண்ணாமூச்சி விளையாட்டாய
எங்கு ஒளிகின்றாய் பிள்ளை நிலவே...
Tuesday, June 2, 2015
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment