Tuesday, June 2, 2015

சென்னையப் பத்தி என் முதல் அனுபவம்.. படிக்கறச்ச லீவுக்கு மாமா வீட்டுக்கு வந்து துணைகளோடயே சுத்தினது கணக்குல சேத்தி இல்ல... கல்யாணமாகி, ட்ரான்ஸ்ஃபர்ல இங்க வந்த உடன், வீடு வட பழனி, ஆபிஸ் பீச் ரோட் லைட் அவுஸ் கிட்ட... வடபழனிலேர்ந்து பட்டினப்பாக்கம் போய் அங்க இருந்து இன்னொரு பஸ் பிடிச்சு லைட் ஹவுஸ் போகனும்... பட்டினப்பாக்கத்துல வெயிட் பண்ணினப்போ, எதோ ஒரு பஸ் வந்தது... வேகமா ஓடிப் போய் லைட் ஹவுஸ் போகுமான்னு கேட்டேன்.... ப்ரக்ஸ்பதி பதிலுக்கு பாரிஸ் போற பஸ்தாம்மான்னான்.... நா உடனே பாரிஸ் போகும் சரி, லைட் ஹவுஸ் போகுமான்னேன்... உடனே பக்கத்துல இருந்த லேடி சிரிச்சு , எல்லா பஸ்ஸும் லைட் ஹவுஸ் தாண்டிதாம்மா பாரிஸ் போகும்னாங்க... அசடு வழிய ஏறி ஆபிஸ் போனேன்.. சாயங்காலம், மறுபடியும் பல்பு வாங்கக் கூடாதுன்னு, எல்லா பஸ்ஸும் பட்டினப்பாக்கம் போகும்னு வந்த பஸ்ல ஏறி டிக்கட் கேட்டா, இறங்கும்மா இது மந்தைவெளி போற பஸ்ஸுங்கிறார் கண்டக்டர் .. சரின்னு இறங்கறத்துக்குள்ள முன்னால இருந்த புண்னியவான் வண்டிய கிளப்பிட்டான்... தொபேல்னு கைய தரைல ஊனி விழுந்துட்டேன்... கைய தூக்கவே முடியல... எப்படியோ ஆட்டோல ஏறி வீட்டுக்கு வந்து, அயோடக்ஸ், அமிர்தாஞ்சன் பாட்டில் எல்லாம் காலி பண்ணியாச்சு... ராத்திரி வலி ஜாஸ்தி ஆன உடன் சூர்யா ஹாஸ்பிடல்ல காமிச்சா, அவங்க எக்ஸ்ரே எடுத்து, ஃப்ராக்சர்னு கன்ஃபார்ம் பண்ணி, அட்மிட் பண்ணி அடுத்த நாள், பச்சை அங்கி போட்டு அனஸ்தீஷியாலாம் கொடுத்து மாவு கட்டு போட்டு அதுக்கும் அடுத்த நாள் வீட்டுக்கு அனுப்பினாங்க .... ஃப்ராக்சர்க்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவர்... அப்ப கோட் கோபி கூட இல்ல கம்ப்ளெயிண்ட் பண்ண... அப்புறம் என்ன பதினஞ்சு நாள் எல் கையோட சுத்தினேன்... அதுக்கப்புறம் உஷாரா ஒரு தடவைக்கு பத்து தடவ பத்து ஆள் கிட்ட விசாரிச்சுட்டுத்தான் எந்த பஸ்லயும் ஏறுவேன்..

No comments: