சிக்குத் தலை
அழுக்கு உடை
கையில் ஒரு கந்தல் மூட்டை,
மொத்த சொத்து
நிலை குத்திய பார்வை சில நேரம்
வாய் நிறைய சிரிப்பு சில நேரம்
தான் யாரென்று மறந்த நிலை
கவலை இல்லை
மகிழ்ச்சி இல்லை
கோபம் இல்லை
நண்பன் இல்லை
எதிரி இல்லை
உறவு இல்லை
வாழ்வைப் பற்றிய சிந்தனை இல்லை
சாவைப் பற்றிய பயமும் இல்லை..
நிம்மதியாக்தான் தெரிகிறது இந்த வாழ்வு
பஸ் ஸ்டாப் அருகில் உள்ள
மரத்தடியில்
நான் தினமும் பார்க்கும் சாலையோர ஞானி....
இன்று அங்கே ஒரே கூட்டம்..
ஆமாம் இப்ப அவருக்கு
உயிரும் இல்லை
கவலைப்படவும் யாருமில்லை...
Tuesday, June 2, 2015
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment