Tuesday, June 2, 2015
சும்மா மாலுக்கு போனப்ப ஒரு அப்பா பண்ணின அலும்ப பார்த்து எழுதினது
எதிரில் அமர்ந்து ஆசையாக தான் கேட்ட சாக்லேட் கேக்கை எடுக்கப் போன மூன்று வயது மகனையும், அவனை கேக்கை தொட விடாமல் கையில் ஸ்பூனையும் ஃபோர்க்கையும் கொடுத்து எப்படி சாப்பிடனும்னு க்ளாஸ் எடுக்கும் கணவன் அருணையும் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஸ்வேதா... சிறிது வாய்க்கு வெளியே வந்தாலும் டிஷ்யூ வைத்து தொடைத்து விட்டுதான் அடுத்து சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான்...
அவன் அப்படித்தான்...
எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு முறை, நாசுக்கு ... அதனால் ஒரு வேலையை முடிக்க தாமதமானாலும் பரவாயில்லை...
மணமான புதிதில் பைக்கில் ஏறி ஆசையாக அவன் இடுப்பை வளைத்து பிடித்தபடி அமர்ந்தவுடன், "எதுக்கு இப்ப சட்டையை கசக்கற .. பின்னால ஹேண்டில் இருக்கு அத பிடிச்சுக்கோ"
தரையில உட்காரக் கூடாது, சேர், சோபாலதான் உட்காரனும் ... எல்லா பொருட்களும் அந்தந்த இடத்தை விட்டு சிறிதும் இடம் மாறக் கூடாது... சோஃபால சிட்டிங் போஸ்ட்சர் மட்டும்தான்... கொஞ்சம் ரிலாக்ஸ்டா காலை நீட்டி சாயக் கூடாது..
"ஓ மை காட்... மாம்ஸ் என்ன பண்றீங்க" என்ற சத்தமான குரல் கேட்டு நிமிர்ந்தாள்...
அருணுடைய அக்கா மகன் ஆகாஷ்... ப்ளஸ் டூ படிக்கறான் . "மாம்ஸ் குழந்தைய ஃப்ரீயா விடுங்க" என்றவன் ரிஷபை தூக்கிக் கொண்டு போய் நன்றாக கை கழுவி விட்டு, மீண்டும் கேக் முன்னால் உட்கார வைத்து, "குட்டி பையா இப்ப கையால எடுத்து சாப்பிடு" என்றான்..
"டேய் என்னடா பண்ற, அவன் கை முழுக்க கிரீமாயிடும். அதோட முகம் சட்டை எல்லாம் கேக் ஆக்கிடுவான்.. பாக்கவே அசிங்கமா.."
"என்ன மாம்ஸ் இப்படி சொல்றீங்க, குழந்தை கேக், ஐஸ்க்ரீமெல்லாம் முகம் முழுக்க அப்பிக்கறது எவ்வளவு அழகு தெரியுமா .. ஃப்ரீயா விடுங்க மாமா.. கைய சுத்தமா கழுவி விட்டுட்டு சாப்ட வைங்க.. விளையாடற நேரத்துல விளையாட விடுங்க...
ரொம்ப மிலிட்டரி ரூல் இருந்தா லைஃப்ல எதையுமே ரசிக்க முடியாது... சரி மாம்ஸ் ஃப்ரெண்ட்ஸ் வெயிட் பண்றாங்க .. ரொம்ப ஹெக்டிக்கா இருக்கு ஸ்டடிஸ்னு ஃப்ரெண்ட்ஸ்லாம் ஒரு ப்ரேக்குக்காக இங்க மாலுக்கு வந்தோம்... இங்க உங்களப் பார்த்த உடன ஹாய் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்... பை மாம்ஸ், பை ஆண்டி, பை பை குட்டி பையா"
சிரித்தபடியே வெளியே காத்திருந்த நண்பர்களுடன் சென்று விட்டான்..
"அட இந்த சின்ன பையனுக்கு தோணினது தனக்கு தோணவில்லையே, குறந்தபட்சமாகக் கூட அருணுக்கு புரிய வைக்க நான் முயற்சிக்கவில்லயே" என்று நினைத்தபடியே கணவனை பார்த்தாள்..
அவன் அமைதியாக இருந்தான். யோசிக்கட்டும்.. தெளிவு பிறக்கும்..
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment