Friday, October 23, 2015

கொலு

வருடம் முழுதும்
இருண்ட அறையில்
துணியில் சுற்றப்பட்டு இருந்தாலும்
பத்து நாட்கள் பரோலுக்கு பின்
மீண்டும் சிறைவாசம்...
போக நேர்ந்தாலும்
வெளி வரும் நாட்களில்
தன் அழகாலும் வண்ணத்தாலும்
பளீரென்ற சிரிப்பாலும்
அனைவரையும் மகிழ்விக்கும்
கொலு பொம்மைகள் போல்
வாழ முடிந்தால் வரம்..



பரண்

அன்றாட வாழ்வில்
அதிகம் பயனிலா பொருட்கள்
நிறைந்த பரணும்
எவருக்கும் பயன்படாத
என் பழைய நினைவுகளும்...
பொழுது போகாத ஒரு பகலில்
கிளறப்படும் போது
சுவாரசியமாகத்தான் இருக்கிறது

ஆயுதம்

தற்காப்பு என காரணம் சொல்லி
நித்தம் வாள் கேடயம்
சுமந்து திரிகிறேன்
காரணம் எதுவாகினும்
என் வாள் முனையும் பிறரை காயப் படுத்தும்...
தினம் சுமப்பதால்
என் கைகளுக்கும் பாரம்
அனைத்தும் அறிந்த பின்னும்
ஆயுதத்தை கீழிறக்க தயங்குகிறேன்..