Thursday, February 12, 2009

கனவுகள்

நாம் காணும் கனவுகளை பற்றியும் அதன் காரணங்கள் பற்றியும் பல கருத்துக்கள் நிலவுகின்றன. கனவில் வரும் காட்சிகள் எல்லாம் நாம் நிஜத்தில் அனுபவித்தவையாக இருக்கும் என்கிறார்கள். சில சமயம் இவ்வாறு கனவு வந்தால் இதெது நடக்கும் என்கிறார்கள்.
என்னுடய கனவில் எப்பொழுதும் பிரம்மாண்டமாக எல்லாம் வரும். மிகப் பெரிய மலைகள், மிகவும் அகலமான, நீளமான நதிகள், பெரிய மலைப் பாம்பு இப்படித்தான் வரும். சமீபத்தில் ஒரு மிகப் பெரிய கோவில் கோபுரம். நுழைந்தவுடன் ஒரே ஒரு சன்னிதி. இது அமைந்திருந்தது மிகவும் சுமாராக பராமரிக்கப் பட்டிருந்த ஒரு பரந்த இடத்தில். இவ்வாறு வரும் கனவுகளுக்கு நானாக கொடுத்துக் கொள்ளும் விளக்கம். நாம வாழ்க்கைல ரொம்ப பெரிசா ஏதோ சாதிக்கப் போறோம் என்பது தான். ஆனால் இது வரை கனவு மட்டும் தான் பெரிதாக வந்து கொண்டிருக்கிறது. எப்படி இருந்தாலும் இந்த பிரம்மாண்டத்தை நான் ரசிக்கிரேன். நான் இவற்றை விரும்புவதால் கூட இந்த மாதிரியான கனவுகள் வரலாம். சின்ன வயதில் பாண்டி விளையடுவதற்கு I first என்று கத்திக் கொண்டே தான் தினமும் எழுந்திருப்பேன்.
இப்பொழுதும் என் பையன் கனவில் தொடர்ந்து வருவது கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட்தான்.

Wednesday, February 4, 2009

அபியும் நானும்

சினிமாவில்தான் அபியும் அப்பாவும். நிஜத்தில் அபியும் அம்மாவும்தான். (அது அபி நயா வாக இருந்தாலும் சரி அபி ஷேக் காக இருந்தாலும் சரி) நான் குழந்தைகளை பள்ளியில் விடும்போது எவ்வளவு அம்மாக்களை பார்க்கிறேன். எவ்வளவு அம்மாக்களுடன் பழகுகிறேன். அப்பாக்கள் ஒரு two wheeler or car with driver (அவரவர்கள் வசதிக்கேற்ப), மனைவி பேரில் ஒரு bank account with reasonable balance ஆகியவற்றை மனைவிக்கு கொடுத்து விடுகிறார்கள். (I am talking about house wives. நிறைய பேர் இருக்காங்கப்பா). இதை வைத்துக் கொண்டு அம்மாக்கள் குழந்தைகளை எல்லா கூடுதல் வகுப்புகளிலும் போட்டு விட்டு அவர்களுடன் அலைந்து கொண்டு, எப்பொழுதும் அவர்கள் நினைவாகவே கவலை பட்டுக் கொண்டு(முக்கியமாக தன் குழந்தையை விட திறமையான குழந்தயை பார்க்கும் போது). இதில் குழந்தைகள் ரொம்பவே பாவம். அதுக்கு interest இருக்கோ இல்லையோ அம்மா சொல்பவற்றை கேட்டுக் கொண்டு. இந்த போராட்டம் L.K.G முதல் ஆறு ஏழு வகுப்புகளுக்கு தொடற்கிரது. இது குறைவதற்கு காரணங்கள்
1. பள்ளி பாடம் அதிகமாவது
2. குழந்தைகளின் விழிப்புணர்வு (போம்மா வேற வேல இல்ல என்னால முடியாதுன்னு சொல்ர தைரியம் வருவது)
3. அப்பாக்களின் விழிப்புணர்வு. (என்னடி இது இவ்வளவு நாளா பணம் செலவழிக்கர பெருசா ஒண்ணும் result இல்லயே) - எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாம் வராது. அதுகளுக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்துத்தான் சேர்க்க வேண்டும்.
4. அம்மாக்களுடய energy level குறைவது.

ஆனால் படுத்தல் வேறு உருவத்தில் வருகிரது. IIT coaching அது இது என்று மூச்சு விட நேரம் இருப்பதில்லை.
ஒரு அம்மா என்னிடம் சொன்னது.
" எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. பாருங்கோ படிச்சதையெல்லாம் மறந்துட்டேன்னு சொல்றா. இவளுக்காக தினமும் சுந்தர காண்டம் படிக்க ஆரம்பிக்கணும். இவ ஒழுங்கா படிச்சா இதெல்லாம் எனக்கு தேவையா?"(பாவம் ராமர்)
அன்பு, பாசம் என்று இவர்கள் படுத்தும் பாட்டில் இருந்து குழந்தைகளுக்கு என்று விமோசனம்???? இவர்களுடய பொழுது போக்கிற்கு குழந்தைகளை வைத்து விளையாடுகிறர்களோ என்று தோன்றும்.

Sunday, February 1, 2009

ஒவ்வொறுமுறை சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் படிக்கும் போதும், நாமும் இவரைப் போலத்தான் பல விஷயங்களை பார்க்கிறோம், கேட்கிறோம். இவரால் மட்டும் எப்படி இவ்வளவு நயமாக எல்லோரும் ரசிக்கும்படி அழகாக எழுத முடிகிரது என்று தோன்றும். மற்றுமொரு ஆச்சரியமான விஷயம் அவருடைய அபரிதமான ஞானம். ஆழ்வார்கள் முதல் அறிவியல் வரை எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் அவருக்கு இருக்கும் ஆர்வம். 75 வயதுக்கும் இளமையாக இருந்து மறைந்தவர்.

இப்பொழுது பலரும் வலையில் எழுதுவது கண்டு ஆர்வம் கொண்டு (பைத்தியக்காரத்தனமாகக் கூட இருக்கலாம்) கிறுக்க ஆரம்பித்திருக்கிறேன்.
எவ்வளவு தூரம் செல்லும். பார்க்கலாம்.