Tuesday, June 2, 2015
இன்று மாலை நடையின் போது இரண்டாவது சுற்றில் ஒரு சிறிய நாய் அருகில் வர, நான் பயத்தில் கத்தி நகர, அது தந்த உற்சாகத்தில் அது என்னை துரத்த, நான் இன்னும் அதிகமாக கத்தியதில் அது பயந்து என்னை தாண்டி ஓட, இப்ப பதறிப்போய் அந்த நாயின் சொந்தக்காரர் ஓடி வந்து அதை தூக்கிக்கொண்டார். நான் இன்னும் பயம் தீராமல் அவரிடம் நாயைக் கையில் பிடித்துக்கொள்ளாமல் போனதற்காக சத்தம் போட்டு விட்டு நடையை தொடர்ந்தேன். அடுத்த சுற்றில், நா.சொ.கா
"excuse me, one minute" என்றார்.
நான் பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு, என்ன என்றேன்.
"he is just just kid , அதான் ஃபரீயா விட்டேன். _ அவர் முகத்தில் நான் அதை நாய் என்று சொன்னதால் வந்த காயம் இன்னும் இருந்தது.
நான் பேசாமல் மண்டை ஆட்டி விட்டு நகர்ந்து விட்டேன்.
எனக்கு நாயில் குழந்தை, வளர்ந்தது என்ற பேதம்லாம் கிடையாது.. எது கடிச்சாலும் ஊசிதானே
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment