ஆழ்கடல் மேடையிலே
அசைந்தாடும் நர்த்தகி போல்
நளினமாய் நடனமிட்டு
கரை தொடும் பேரலையே..
ஆழ்கடல் வீதியில்
துள்ளி விளையாடும் சிறு பிள்ளை
தாயாக கரையை எண்ணி
முத்தமிடும் பேரலையே..
ஆழ்கடல் களத்தினிலே
போரிடும் வீரனை போல்
ஆக்ரோஷமாய் சண்டையிட்டு
கரை கண்டு அமைதியான பேரலையே..
ஆழ்கடலெனும் தாய்க்கு
அடங்காது ஓடி வந்து
கரையெனும் தகப்பனுக்கு பயந்து
பின் செல்லும் பேரலையே..
ஆழ்கடல் ப்ரஞ்சத்தில்
புயலாய் ஆர்ப்பரித்து,
பின்
தென்றலாய் அசைந்து வந்து,
என்
பாதம் கழுவும் பேரலையே
Tuesday, June 2, 2015
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment