Tuesday, June 2, 2015

நான் அப்ப ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தேன்... ஶ்ரீரங்கத்தில் நீஈஈஈஈளமான வீடு....நமக்கு உபயோகமே படாமல் பெருக்கி மொழுகற வேலை வைக்கும், 3x6" க்கு வாசலிலிருந்து ஹாலுக்கு போவதற்கு முன் மூன்று ஹால் தாண்டி மூன்று தாழ்வாரங்கள் உண்டு... அதில் ஒன்றில் கிச்சனுக்கு எதிர்தாப்ல ஒரு பெரிய உரல் இருக்கும்... அப்பல்லாம் அதுலதான் இட்லி தோசைக்கு அரைக்கறது... அந்த உரல் மேல ஒரு ஜன்னல்.. அது வழியா பக்கத்தாத்து ரிடயர்ட் ஹிந்தி டீச்சர் ஹிந்து பேப்பர் வாங்கி படிச்சுட்டு கொடுப்பா... நான் காலேஜ் முதல் வருடம் படிக்கறச்ச அவங்க இறந்துட்டாங்க... ஒரு மாசம் போயிருக்கும்... நான்பாட்டுக்கு எதோ பாடிண்டு கிச்சன் பக்கம் போறேன்.. ‘’ ஜெயந்தி பேப்பர் தரியா’” – டீச்சரோட குரல்.. அம்மாஆஆஆஆஅ என்று அலறிய படியே வாசலை நோக்கி ஓடினேன்… என் கூச்சல் வாசலிலிருந்த அம்மாவ ரீச் பண்றத்துக்குள்ள பின்னாலருந்து பெரிய சிரிப்பு சத்தம்.. பயத்தோட திரும்பி பார்த்தா… அண்ணா … கைல கெடச்சதெல்லாம் விட்டு எறிஞ்சேன்… இது எதுவுமே தெரியாத அம்மா கொஞ்ச நேரம் கழிச்சு வந்து, ‘எதுக்கு எல்லாத்தயும் கூடம் பூரா எறச்சுசுருக்க… ’ ‘’இல்லம்மா… இவன் என்ன பண்ணான் தெரியுமான்னு ஆரம்பிச்சு ஒரு பிளாக்கனம் பாடினா… ‘’நம்மாத்துக்குள்ள யாரு வரப் போறா’ இதுக்கெதுக்கு இவ்வளவு ஆகத்தியம் பண்ணிண்டுருக்க’’… அம்மா போனவுடன ஒரு மணி நேரத்துக்கு அவன திட்டி திட்டி அழுதப்புறம் தான் பயம் போச்…

No comments: