Tuesday, June 2, 2015

தலை நரைத்து ,நாளாச்சு ஞானம் வர நாள் இருக்கு நடுவாக நான் இருக்கேன் அரை சதம் நெருங்கியாச்சு ஆணாகா பிறக்கவில்லை என ஏக்கம் பல நாளாய்.. ஆண் போல பல வேலை பெண்ணிங்கு செய்தாலும் ஆணுக்குள்ள சுதந்திரம்தான் பெண்ணுக்கில்லை என நினைத்தேன் கிட்டாத சுதந்திரம்தான் அவளுக்கான் வரம் என்று புரிந்து கொண்ட பின்னாலே பெண்ணாக இருப்பதிலே பெருமைதான் கொள்கின்றேன்

No comments: