Sunday, February 1, 2009

ஒவ்வொறுமுறை சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் படிக்கும் போதும், நாமும் இவரைப் போலத்தான் பல விஷயங்களை பார்க்கிறோம், கேட்கிறோம். இவரால் மட்டும் எப்படி இவ்வளவு நயமாக எல்லோரும் ரசிக்கும்படி அழகாக எழுத முடிகிரது என்று தோன்றும். மற்றுமொரு ஆச்சரியமான விஷயம் அவருடைய அபரிதமான ஞானம். ஆழ்வார்கள் முதல் அறிவியல் வரை எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் அவருக்கு இருக்கும் ஆர்வம். 75 வயதுக்கும் இளமையாக இருந்து மறைந்தவர்.

இப்பொழுது பலரும் வலையில் எழுதுவது கண்டு ஆர்வம் கொண்டு (பைத்தியக்காரத்தனமாகக் கூட இருக்கலாம்) கிறுக்க ஆரம்பித்திருக்கிறேன்.
எவ்வளவு தூரம் செல்லும். பார்க்கலாம்.

1 comment:

கிவியன் said...

ஆக சுஜாதா இன்னுமொருவரை எழுத தூண்டியிருக்கிறார். அதுவே அவரின் வெற்றி.

//பைத்தியக்காரத்தனமாகக் கூட இருக்கலாம்// ரொம்ப ஓவரா போயி பாய பிராண்டம இருந்தா சரி.